நான்கு வருடங்களாய்
எழுதப்பட்ட எங்கள் நட்பின் கடிதம்
இன்று நினைவுகளால் ஒட்டப்பட்டு
வாழ்வென்ற முள் வழி பாதையில்
பயணிக்க போகிறது.........................
கல்லூரியில் ,
தேடி கண்டெடுத்த சிற்பி முத்துக்கள்
என்
நண்பர்கள் .......................
--
நினைவுகள் அதிகம்.ஆனால்,
நாட்கள் குறைவு.
இன்பங்கள் அதிகம் -ஆனால்,
நிமிடங்கள் குறைவு.
வாழ்வின் செழிப்பு அதிகம்.-ஆனால்,
வினாடிகள் குறைவு...............
***நம் நட்பிலே ****
கல்லூரியை விட்டு
நமது கனவுப்பூக்கள் உதிர்ந்தாலும்,
நினைவென்ற நம் நம் நட்பு வாசம்,
ஒவ்வொருவர் மனங்களிலும் ,
தினந்தோறும்
பூ பூத்து கொண்டிருக்கும்.
முதல் வருடத்தில்,
பூத்த நமது கனவுப்பூக்கள் ,
இன்று வாசமாய்,
நினைவுகளை மட்டும் வீசி
ஓரிரு மாதங்களில்
கல்லூரி விட்டு உதிர போகிறது.
--
உள்ளம் உறவாடும் உண்மை அன்பின் காதல் உறவு *** நட்பு ***
ஒற்றை வேலி தோட்டத்தில்
அடைபட்டு இருந்தாலும் ,
வெவ்வேறு பூவின் வாசமாக
வீசிய அக்காலம் சென்று ,
நட்பு தோட்ட பூக்களின்
மணமாக வீச தொடங்கி இருக்கிறோம் இன்று
கல்லூரியில்...................
...
நினைவுகள் பேசும் காதல் உணர்வு
எங்கள் நட்பு.
தடங்கல்கள் இன்றி குழையும் உள்ளம்
எங்கள் நட்பு.
தீராத பகைமையும் ,எங்கள் நட்பில் தீர்ந்திடும்.
பேசாத மனங்களும் எங்கள் அன்பில் கரைந்திடும்.
தீராத பகைமையும் ,எங்கள் நட்பில் தீர்ந்திடும்.
பேசாத மனங்களும் எங்கள் அன்பில் கரைந்திடும்.
நண்பனே....
நினைவில் தேடும் என் நண்பனே....
பொன்மலர் ,
தூவும் வாழ்வின் நண்பனே.
இயற்கை ரசித்த நட்பின் ஓவியம்
நாம் தான் என்பதா.
வானம் கண்டு வியக்கும் நிலவு
நம் நட்பு என்பதா.
கால்கள் தடம் மாறி பிரிந்தாலும்,
செல்லும் இடம் என்றும் மாறாது.
நம் நட்பு எங்கேயும் பிரிந்தாலும்
உருவம் அழிந்து என்றும் சாகாது.நினைவுகள் பேசும் காதல் உணர்வு
எங்கள் நட்பு.
தடங்கல்கள் இன்றி குழையும் உள்ளம்
எங்கள் நட்பு.
,,,,,,,,நட்பு என்னும் மணம் கமழும் கல்லூரி என்ற பூந்தோட்டம்
நம் வாழ்வில் என்றும் மறவா தேரோட்டம்
கல்லூரி என்ற நட்பின் மலர்களில்
வசிக்கும் நண்பர்களின் மென்மை வாசம் தான் நட்பு
அன்பு என்ற செடியில் ,நட்பின் கிளைகளில்
வசிக்கும் நண்பர்கள் என்றும் உதிரா பூக்கள்
இங்கு ,
நண்பர்களின் பகிர்வு தன்மை
என்றும் அழியா ஓவியம் போல ,
கண் தெரியா இளந்தென்றல் கூட
நட்பை சுவாசிக்க ஆசை கொள்ளும்
இந்த நந்தவன கல்லூரி என் வாழ்வில்
என்றும் அழியா கல்வெட்டு போல ,,,,,,,,,,,,
*விரல்களின் இடைவெளிகள் போலவே
நண்பர்களின் பிரிவுகள் -ஒருபோதும்
நம் உறவை விட்டு விலகாது ***
***உணர்வுகளை மதிக்க தெரிந்த உறவுகளுக்கு மட்டுமே மதிப்பு அதிகம் ....அது போலவே நேசிக்க
தெரிந்த மனிதனுக்கு மட்டுமே பாசம் அதிகம் ***
**அன்பென்ற மூன்றெழுத்தை கருவாக கொண்டு உருவாகியதே நட்பென்ற உயிரெழுத்து **