Sunday, June 5, 2011

en kadhali

என் இனிய அவளின் உள்ளத்திற்கு ,
****இயற்கையின் தோல்வி****

உன் ஈடிணையற்ற முகத்திற்கு
என் ஓரிரு வரிகளை
சமர்பிக்கின்றேன் கவியாக,
வானத்தின் பொட்டுக்கள்
உந்தன் முகத்தில்
ஜொலிக்க ஆசை கொள்கின்றன.
கடலின் தழுவல்கள்
உந்தன் அங்கம்
அணைக்க ஓடி வருகின்றன.
ஆகாய மேகங்கள்
உன்னை வரைய
போட்டி போட்டு கொள்கின்றன'
காற்றின் அசைவுகள்
உன் கூந்தல் தடவ
வீச கற்று கொள்கின்றன.
மணம் கமழும் பூக்கள்
உன் கூந்தலில் வசிக்க
இடம் கண்டு எடுக்கின்றன
விண்ணை ஆளும்
திங்களும் ஆதவனும்
உன் கண்களில் மலர முனைகின்றன .
நினைவுகளும் கனவுகளும்
உன்னை அடைய
மாறி மாறி வினவுகின்றன
மகிழ்விக்க தெரியாத
புயல் வெள்ளமும்
உனக்காக
தன் நிலை மாறுகின்றன
உயிரற்ற அபாய கருவிகள் கூட
உனக்காக
தன் குணத்தை மாற்றி கொள்கின்றன
தன் நிலைநோக்கி ஓடுகின்ற பொய்கையும்
உன் பேச்சை கேட்டு
பின்னால் விரைய முன்வருகின்றன
மறைந்து போன என் காதல் நினைவுகளும்
உன் குரல் கேட்டு
தன்னை வெளிகாட்டிகொள்ள தயாராகின்றன
சுற்றிருக்கும் மரங்கள் கூட
உன் வருகையை நோக்கி
சப்தம் எழுப்பி வரவேற்கின்றன
மிகைப்படுத்த முடியா
இந்த இயற்கையே -உன்னை
பல முறைகளில் காதலித்தாலும்
நீ என்னை மட்டும் விரும்புவது
ஏனடி ?
பதில் நீ மறந்தால்,
அடுத்த கவிதையில் உன் பதிலை
நான் கவியாக வரைகின்றேன்

No comments:

Post a Comment